
மலர் சாகுபடி நுட்பங்கள்
மலர் சாகுபடி நுட்பங்கள்
மலர் சாகுபடி இரண்டு வழிகளில் செய்யப்படுகிறது, முதலில் மலர் செடிகள் மற்ற பயிர்களைப் போன்று திறந்தவெளியில் வளர்க்கப்படுகின்றன, இரண்டாவது பாதுகாக்கப்பட்ட சாகுபடி ஆகும், இதில் தாவரங்கள் அல்லது பயிர்களுக்கு செயற்கையாக வளரும் சூழல் (பசுமைக்குடில்) உருவாக்கப்படுகிறது. அந்த சூழலில், பருவமில்லாத பூக்கள் மற்றும் அலங்கார செடிகள் போன்றவை ஆண்டு முழுவதும் உற்பத்தி செய்ய முடியும்.
“எனவே இன்று செண்டுமல்லி சாகுபடி பற்றிய முழுமையான தகவலை உங்களுக்கு வழங்குகிறோம்.” விவசாய நிபுணர்களின் கூற்றுப்படி, குளிர்காலம், கோடை மற்றும் மழைக்காலங்களில் எப்போது வேண்டுமானாலும் செண்டுமல்லி விவசாயம் செய்யலாம்; செண்டுமல்லி விவசாயம் பெரும்பாலும் குளிர் காலத்தில் செய்யப்படுகிறது. செண்டுமல்லி பூக்களின் வளர்ச்சி மற்றும் தரம் இரண்டும் குளிர் காலத்தில் நன்றாக இருக்கும், இதன் காரணமாக இந்த பருவம் அதற்கு சாதகமாக கருதப்படுகிறது. இருப்பினும், இது பருவமழை, குளிர்காலம் மற்றும் கோடை ஆகிய மூன்று பருவங்களிலும் பயிரிடப்படுகிறது என்பதும் உண்மை.
.png)

இந்தியாவில் பிரபலமான மற்றும் மேம்படுத்தப்பட்ட செண்டுமல்லி இரகங்கள்
இந்தியாவில் பிரபலமான மற்றும் மேம்படுத்தப்பட்ட செண்டுமல்லி இரகங்கள்
1 ஆப்பிரிக்க செண்டுமல்லி: இதன் பூக்கள் பெரியவை மற்றும் தங்க மஞ்சள் முதல் ஆரஞ்சு நிறத்தில் ஆண்டு முழுவதும் பூக்களை கொடுக்கும். இந்த இரகம் விதைத்த 90-100 நாட்களில் பூக்களை கொடுக்கத் தொடங்குகிறது. தாவரங்களின் உயரம் சுமார் 75-85 செ.மீ. இருக்கும்.
2 பிரெஞ்ச் செண்டுமல்லி: விதைகளை விதைத்த 75-85 நாட்களுக்குப் பிறகு இது பூக்கத் தொடங்குகிறது, இதன் தாவரங்கள் பல கிளைகளுடன் சுமார் 1 மீட்டர் உயரத்தில் இருக்கும், அவற்றின் பூக்கள் மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிறத்தில் இருக்கும் மற்றும் பூக்களின் விட்டம் 7-8 செ.மீ. இருக்கும்.


- பூசா ஆரஞ்சு: இந்த இரகம் நடவு செய்த 123-136 நாட்களுக்குப் பிறகு பூக்கும். பூவின் நிறம் சிவப்பு ஆரஞ்சு ஆகவும், அதன் விட்டம் 7 முதல் 8 செ.மீ. இருக்கும். ஒரு ஹெக்டேருக்கு சராசரி 35 டன் மகசூல் கொடுக்கும்.
4 பூசா பசந்தி: இந்த ரகம் 135 முதல் 145 நாட்களில் அறுவடைக்கு தயாராகிவிடும். இதன் பூ மஞ்சள் நிறத்தில் 6 முதல் 9 சென்டிமீட்டர் நீளம் கொண்டது.


செண்டுமல்லி சாகுபடிக்கு நிலம் தயார் செய்தல்
செண்டுமல்லி சாகுபடிக்கு நிலம் தயார் செய்தல்
செண்டுமல்லி பல்வேறு வகையான மண்ணில் பயிரிடலாம் ஆனால் கார அமில நிலை 7.0 முதல் 7.6 வரை உள்ள நன்கு வடிகட்டிய களிமண் உற்பத்திக்கு ஏற்றதாக கருதப்படுகிறது. நிலத்தை தயார் செய்யும் போது, ஆழமான உழவு செய்யவும். உழவு செய்யும் போது, 15-20 டன் அழுகிய மாட்டு சாணம் அல்லது காம்போஸ்ட்டை நிலத்தில் கலந்து வயலை சமன் செய்ய வேண்டும். வயலில் ஒரு ஹெக்டேருக்கு 6 மூட்டை யூரியா, 10 மூட்டை சிங்கிள் சூப்பர் பாஸ்பேட் மற்றும் 3 மூட்டை பொட்டாஷ் ஆகியவற்றை இடவும். யூரியாவை மூன்று சம பாகங்களாகப் பிரித்து, நடவு செய்யும் போது ஒரு அளவு யூரியா, முழு அளவு சிங்கிள் சூப்பர் பாஸ்பேட் மற்றும் பொட்டாஷ் கொடுக்க வேண்டும். நடவு செய்த 30 மற்றும் 45 நாட்களுக்குப் பிறகு இரண்டாவது மற்றும் மூன்றாவது அளவு யூரியாவை செடிகளைச் சுற்றியுள்ள வரிசைகளுக்கு இடையே இடவும். இதன் சாகுபடிக்கு சூரிய ஒளி மிகவும் முக்கியமானது என்பதை நினைவில் கொள்க.
விவசாயிகள் ரசாயன உரங்களுக்கு பதிலாக அசோடோபாக்டர், அசோஸ்பைரில்லம் போன்ற உயிர் உரங்களை பயன்படுத்தி மண்ணின் தரத்தை பராமரிக்கவும், உற்பத்தியை அதிகரிக்கவும் வேண்டும். உயிர் உரங்களின் பயன்பாடு உற்பத்தி செலவைக் குறைக்கிறது.
முதன்முறையாக தோட்டம் தயார் செய்தால் விதைகளுக்குப் பதிலாக நாற்றுகளை நடுவது நல்லது.


நாற்றங்கால் தயாரிப்பு:-
நாற்றங்கால் தயாரிப்பு:-
விவசாயிகள் நாற்றங்கால்களையும் தாங்களாகவே தயார் செய்து கொள்ளலாம்; ஒரு ஏக்கர் நிலத்திற்கு 600-800 கிராம் விதைகள் தேவைப்படும். ஒரு பாக்கெட்டுக்கு ரூ.100 முதல் ரூ.1500 வரை செலவாகும், ஜூன் நடுப்பகுதியிலிருந்து ஜூலை நடுப்பகுதி வரை மழைக்காலங்களில் விதைக்க வேண்டும். குளிர்காலத்தில், விதைப்பு செப்டம்பர் நடுப்பகுதியிலிருந்து அக்டோபர் நடுப்பகுதிக்குள் முடிக்கப்பட வேண்டும். 3x1 மீட்டர் அளவுள்ள நாற்றங்கால் படுக்கைகளைத் தயார் செய்யவும் அல்லது மாட்டுச் சாணம் மற்றும் கோகோ பித் ஆகியவற்றைக் கொண்ட குழித்தட்டுகளைப் பயன்படுத்தவும். விதைகள் முளைக்க 5 முதல் 10 நாட்கள் ஆகும், மேலும் 15 முதல் 20 நாட்களில் நடவு செய்ய தயாராக இருக்கும். ஆனால் நீங்கள் நாற்றுகளை வாங்கினால், நேரம் மிச்சமாகும் மற்றும் ஆரோக்கியமான தாவரங்கள் கிடைக்கும். பொதுவாக ஒரு செடியின் விலை ரூ.4 முதல் ரூ.10 வரை இருக்கும்.


நடவு:-
நடவு:-
மாலையில் நடவு செய்ய வேண்டும், ஆப்பிரிக்க செண்டுமல்லி 45 * 45 செ.மீ இடைவெளியில் நடவு செய்ய வேண்டும். ஒரு ஹெக்டேரில் நடவு செய்ய 50 முதல் 60 ஆயிரம் நாற்றுகள் தேவைப்படும். அதேபோல், பிரெஞ்ச் செண்டுமல்லியை 25*25 இடைவெளியில் நடவு செய்ய வேண்டும்.இதில் ஹெக்டேருக்கு ஒன்றரை முதல் இரண்டு லட்சம் செடிகள் தேவைப்படும், நடவு செய்த பின் லேசான பாசனம் செய்ய வேண்டும்.


நீர்ப்பாசனம்
நீர்ப்பாசனம்
நீர்ப்பாசனம் வானிலை சார்ந்தது, செண்டுமல்லி செடிகளுக்கு அதிக ஈரப்பதம் தேவையில்லை. வயல்களில் சிறந்த வடிகால் வசதி இருந்தால், கோடையில் 7-8 நாட்கள் இடைவெளியிலும், குளிர்காலத்தில் 11-14 நாட்கள் இடைவெளியிலும் நீர்ப்பாசனம் செய்ய வேண்டும். செண்டுமல்லி செடிகள் பலவீனமான தண்டுகளைக் கொண்டுள்ளன, எனவே அவற்றிற்கு வெளிப்புற ஆதரவை ஏற்பாடு செய்வது அவசியம். மேலும் அவ்வப்போது வேரை சுற்றி மண் அணைக்க வேண்டும்.


களை மேலாண்மை:-
களை மேலாண்மை:-
மழை மற்றும் குளிர்காலத்தில் செண்டுமல்லி பயிரில் களைகள் ஒரு பெரிய பிரச்சனையாகும், இது நேரடியாக விளைச்சலை பாதிக்கிறது, எனவே தேவைக்கேற்ப சரியான நேரத்தில் கை அல்லது களைக்கொல்லியைப் பயன்படுத்தி கட்டுப்படுத்த வேண்டும்.



நோய் மற்றும் பூச்சி மேலாண்மை:-
நோய் மற்றும் பூச்சி மேலாண்மை:-
இருப்பினும், வயலில் நல்ல வடிகால் அமைப்பு இருந்து, சரியான நேரத்தில் களைகளை கட்டுப்படுத்தினால், பூச்சிகள் மற்றும் நோய்களின் பிரச்சனை குறைகிறது. ஆனால் சில சமயங்களில் சிலந்திப்பேன் அல்லது அசுவினி போன்ற சில பூச்சிகள் பயிரை பாதிக்கலாம், இவற்றைக் கட்டுப்படுத்த ஓபரான் மற்றும் கான்ஃபிடர் அல்லது கான்ஃபிடர் சூப்பர் போன்ற பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்தலாம்.
சாம்பல் நோய் தாக்குதலால் பயிர் பாதிக்கப்பட்டால் ஏவியேட்டர் எக்ஸ்ப்ரோ போன்ற பூசண கொல்லிகளை அறிவுறுத்தியபடி பயன்படுத்த வேண்டும். விவசாயிகள் விரும்பினால் அருகில் உள்ள வேளாண் அறிவியல் மையத்தையும் தொடர்பு கொள்ளலாம்.


பூக்கள் அறுவடை
பூக்கள் அறுவடை
பூக்கள் முழுமையாக மலர்ந்த பிறகு அறுவடை செய்ய வேண்டும். பூக்களை பறிக்க சிறந்த நேரம் காலை அல்லது மாலை நேரமாகும். பூக்களை பறிக்கும் முன், பூக்களின் புத்துணர்ச்சி நிலைத்திருக்க, வயலில் சிறிது நீர் பாய்ச்ச வேண்டும். ஒரு ஏக்கர் வயலில் வாரந்தோறும் 3 குவிண்டால் வரை பூக்கள் மகசூல் கிடைக்கும். வெளிச்சந்தையில் இதன் பூக்களின் விலை கிலோ ரூ.70-80க்கு கிடைக்கிறது, அதாவது வாரந்தோறும் ரூ.20-25 ஆயிரம் வரை சம்பாதிக்கலாம். இது தவிர மருந்து தயாரிப்பு நிறுவனங்களும், அழகு சாதனப் பொருட்கள் உற்பத்தியாளர்களும் விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நல்ல விலைக்கு பூக்களை கொள்முதல் செய்கின்றனர்.


இந்த கட்டுரையைப் படித்ததற்கு நன்றி, கட்டுரையை விரும்பியதிற்கு நீங்கள் ♡ ஐகானைக் கிளிக் செய்திருப்பீர்கள் என்று நம்புகிறோம், மேலும் இதை இப்போதே உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் பகிர்ந்து கொள்ளுங்கள்!